வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மலர்கள் ரசிக்கவா மணக்கவா?



வெண்ணிலா அழகென்பர் - என்
பெண்ணவளை காணாதோர்.

மின்னிடும் பொன் அழகென்பர் -அவள்
நகைப்பதை கன்டிராதோர்.

கொவ்வை சிவப்பென்பர் - தேவதை
இதழினை பார்க்காதோர்.

குயிலிசை இனிதென்பர் அன்பே -  உன்
குரலினை கேளாதோர்.

கயல் அழகென்பர் -  உன்
கரு விழியினை காணாதோர்.

காரிருள் இருளென்பர் -  உன்
கலைந்த கூந்தலை காணாதோர்.

மொத்தத்தில்,

மலர்களெல்லாம் அழகிழ‌ந்த்தது - இப்புவியில்
உன் ம‌ல‌ர்வின் பின்புதான்.

மலராக உன்னை  ரசிக்கிறேன் -ஆனால்
மனமோ   உன்னை மணக்க துடிக்கிறது.



Posted by: http://www.kuviyalkal.blogspot.com/

No comments: