வணக்கம்-குவியல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

புன்(நகை)யை அடகு வத்து விட்டாயா?


விடியுமா என வெறுப்புடன் கழிக்கும்
‍‍-விடியா இரவுகள்.

காலை எழுந்ததும் உன்னை காண‌
-துடிக்கும் விழிகள்.

காலை வெயிலில் உன்னை காண‌
-காத்திருக்கும் பாத‌ங்க‌ள்.

க‌ண்முன்னே வ‌ரும்போது க‌தைக்க‌ எண்ணி
-சிறைப்பிடிக்கும் வார்த்தைக‌ள்.

 
உன் விம்ப‌ம் ம‌றையும்வ‌ரை பார்க்கும்
-அந்த‌ நிமிட‌ங்க‌ள்.


ஆயிர‌ம் கோடி வார்த்தைக‌ள் இருந்தும் தொலைபேசியில்
-த‌டுமாறும் உத‌டுக‌ள்.

உன்னை காணும்போது த‌லைகால் புரியாம‌ல்
-த‌த்த‌ளிக்கும் த‌டுமாற்ற‌ம்.


வேலை இல்லாவிடினும் உன்னை பார்க்க‌ அமைக்கும்
க‌டிகார‌ முட்க‌ள்.

போகிறேன் என்று நீ விடை பெற்றும் உன்னை
-நின‌க்கும் ஞாப‌க‌ங்க‌ள்.
 
இத்த‌னையும் ஏனோ என்னோடு...

தின‌மும் காலையில் (நகை)த்து விட்டு ம‌ட்டும் போகிறாய்,
உன்,
புன்(நகை)யை என்னிட‌ம் ம‌ட்டும் (அட‌கு) வ‌த்துவிட்டு.

No comments: