![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic9ZBzm8fNthSAVzhW6n6BbHDCbnNBMKBx-ZeQcCpQy_RMeZ9xhpqSWzAfk0HDICs2Idi8v-s3hD0qSkrP1vbNjlaErEanbEnsaNwh2kKSgJff6F-xQTv5ILRPcZjcReJ1OMSEPludF-Wz/s320/bahamas-boat-rental.jpg)
பெரிய கப்பலாய் இல்லாவிடினும்
என் அளவிற்கு சின்னதாய் ஒரு தோணி
அழகாய் அமைதியாய்
தொடங்கினேன் பயணத்தை
அலைகள் _பனி மலைகள் _புயல் மழைகள்
சுழல் காற்று சூறாவளிகள்
சுனாமிகள் தாண்டி
ஆழங்களின் அதிசயங்கள் அழைக்க
செல்கிறேன்..................
அலைகளில் அமிளும் போது
மேலெளுவேன் என்ற நம்பிகை
மேலெளும் போதோ
உலகத்தை வென்று விட்ட உண்ர்வு
சோர்வுகள் _ சோகங்கள்
தனிமைகள் _ தவிப்புகள்
தளராமல் கரையை தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைக்கவில்லை இன்னும்
என் தோணி கானல் நீரில் நீந்தும்
காகித தோணி என்பதால்
No comments:
Post a Comment