வெண்ணிலா அழகென்பர் - என்
பெண்ணவளை காணாதோர்.
மின்னிடும் பொன் அழகென்பர் - அவள்
நகப்பதை கண்ண்டிராதோர்.
குங்குமம் சிவப்பென்பர் - தேவதை
இதழினை பார்க்காதோர்.
குயிலிசை இனிதென்பர் - அன்பே
உன் குரலினை கேளாதோர்.
கயல் அழகென்பர் - உன்
கரு விழியினை காணாதோர்.
காரிருள் அழகென்பர் - உன்
கலைந்த கூந்தலினை காணாதோர்.
மொத்தத்தில்
உன்னை காணாதோர்
மட்டும்தான் இவ்வுலகம் அழகென்பர்...
www.kuviyalkal.blogspot.com
No comments:
Post a Comment